விநாயகர் கோவில்களில் நிவாரண ஹோமம்
திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள விநாயகர் கோவில்களில், மகா சங்கடஹர நிவாரண ஹோமம் நேற்று நடந்தது. மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, திருவள்ளூர் தேவி மீனாட்சி நகரில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலைச் சேர்ந்த காரிய சித்தி விநாயகர் கோவிலில் நேற்று, மகா கணபதி சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து, அபிஷேக ஆராதனை நடந்தது. திருவள்ளூர் ராஜாஜிபுரம் - விவேகானந்தர் சாலையில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், காலை, 8:00 மணி முதல், 2:00 மணி வரையும், மதியம், 3:00 மணி முதல் மாலை, 7:00 மணி வரையும் லட்சார்ச்சனை நடந்தது. ஜெயாநகர் விஸ்தரிப்பில் உள்ள வல்லப கணபதி கோவிலில் விநாயகருக்கு, காலையில் சிறப்பு அபிஷேகமும், மாலை, 4:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. சோழவரம் ஒன்றியம், பஞ்சேஷ்டியை அடுத்த நத்தம் (இகணபாக்கம்) கிராமத்தில், காரிய சித்தி கணபதி கோவிலில், சங்கட நிவாரண ஹோமம் காலை, 10:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.