உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வர்த்தந்தி மஹோத்ஸவம்

வர்த்தந்தி மஹோத்ஸவம்

வத்திராயிருப்பு, வத்திராயிருப்பு நடு அக்ரஹாரம் ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில் சிருங்கேரி ஸ்ரீவிது சேகரபாரதி சுவாமிக்கு வர்த்தந்தி மஹோத்ஸவ விழா நடந்தது. அதிகாலை முதல் யாகபூஜைகள் நடந்தது. சுவாமிக்கு ஆயுஷ்ய ஹோமம் உள்ளிட்ட பல்வகை ஹோமங்கள், வேதபாராயணங்கள் நடந்தது. இந்து பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுகள், எழுதுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது. மதுரை சிருங்கேரி மடத்தின் மேலாளர் விஸ்வநாதன் வழங்கினார். பள்ளி காரியதரிசி ரெங்கசாமி தலைமை வகித்தார். தலைவர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். நிதிக்கமிட்டி தலைவர் அரிஹரகிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிருங்கேரி முத்திராதிகாரி சங்கரநாராயணன், ஜானகிராமன் இலவச பொருட்களை வழங்கினர். சத்யநாராயணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !