உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் முருகன் கோயில் குடவருவாயில் தீபாரதனை

திருச்செந்தூர் முருகன் கோயில் குடவருவாயில் தீபாரதனை

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி திருவிழா ஐந்தாம் நாளான நேற்று சுவாமிக்கு குட வருவாயில் தீபாரதனை நடந்தது. முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆவணி திருவிழா ஆக.,22 ல் கொடியேற்த்துடன் துவங்கியது. 12 நாட்கள் திருவிழா நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. ஐந்தாம் திருவிழாவான நேற்று (ஆக., 26) வெள்ளி சப்பரத்தில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளி வீதியுலா நடந்தது. பின் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. இரவு 7.30 மணிக்கு குட வருவாயில் தீபாரதனை நடந்தது. பின் சுவாமியும் அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். ஏழாம் நாளான ஆக., 28 ல் அதிகாலை 4.30 மணிக்கு சண்முகருக்கு உருகு சட்ட சேவை நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதியுலா வருகிறார்.

ஆக., 29 ல் மாலை சுவாமி பச்சை சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் வீதியுலா வருகிறார். ஆக., 31 ல் காலை 6.30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். பின் ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடக்கிறது. செப்., 2 ல் மஞ்சள் நீராட்டு கோலத்தில் சுவாமியும் அம்பாளும் வீதியுலா வருகின்றனர். அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் வரதராஜன், மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !