உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் காலை கணபதி ஹோமம் நடந்தது.

ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் காலை கணபதி ஹோமம் நடந்தது.

விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. இதேபோல, வரும் 8ம் தேதி, குன்னுாரில் நடக்கும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்துக்காக, இந்து முன்னணி சார்பில், தாலுகா முழுவதும்,72 இடங்களில்,108 சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் துவக்கப்பட்டன. * கூடலுார் விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை கணபதி ஹோமம், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், திரளான, பக்தர்கள் பங்கேற்று, விநாயகரை தரிசித்தனர். பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டன. மாலை, 5:30 மணிக்கு, அலகரிக்கப்பட்ட விநாயகர் கோவிலை சுற்றி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !