கல்யாண வெங்கடரமண கோவில் புனிதப்படுத்துதல் விழா
ADDED :3355 days ago
கரூர்: தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புனிதப்படுத்துதல் விழா வரும், 13ம் தேதி நடக்கிறது. கரூர் அடுத்த தான்தோன்றிமலை வெங்கடரமண கோவிலில், வரும், 11ம் தேதி மாலை, 5 மணிக்கு வாஸ்து சாந்தியுடன், கோவிலை புனிதப்படுத்துதல் விழா துவங்குகிறது. தொடர்ந்து, 12ம் தேதி மதியம், 6.30 மணிக்கு மஹா சாந்தி ?ஹாமம் நடக்கிறது. வரும், 13ம் தேதி காலை, 10.30 மணிக்கு புனிதப்படுத்துதல் மற்றும் திருப்பாவாடை நைவேத்தியம் நடக்கிறது. அன்று, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படும்.