உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செத்தவரை கோவில் கும்பாபிஷேகம்

செத்தவரை கோவில் கும்பாபிஷேகம்

செஞ்சி: செத்தவரை கணபதி கோவில் மகா கும்பாபிஷேகம் சிவஜோதி மோனசித்தர் முன்னிலையில் நடந்தது. செஞ்சி தாலுகா செத்தவரை கிராமத்தில் உள்ள கணபதி கோவிலில் திருப்பணிகள் முடிந்து, கடந்த 5ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது.முன்னதாக 4ம் தேதி மாலை 6:00 மணிக்கு மங்கள இசை, 6:30 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை, இரவு 8:00 மணிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. மறுநாள் (5ம் தேதி) அதிகாலை 5:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, காலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள், செத்தவரை சிவ ஜோதி மோன சித்தர் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !