கடவுள் இல்லை என்று மறுக்கும் அளவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது ஏன்?
ADDED :3447 days ago
கடவுளின் பெயர், வழிபாட்டுமுறை மத அடிப்படையில் வேறுபட்டிருந்தாலும் எல்லா மதங்களும் கூறும் உண்மை உலகைப் படைத்துக் காப்பது கடவுள் தான் என்பதே. கடவுள் மறுப்பு என்பது மற்ற மதங்களைப் பொறுத்தவரை தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. ஆனால் எல்லா மதங்களுக்கும் முன்னோடியான இந்து மதத்தில் சுதந்திரம் அதிகம். அதிலும் தமிழகத்தில் பலவிதங்களில் கடவுளை அவமானப்படுத்தும் அவலம் உள்ளது. தாங்கள் கேட்பது போல் யாரும் சுதந்திரம் கொடுக்கவில்லை. தட்டிக் கேட்க ஆளில்லை என்பதால் குதிக்கிறார்கள். அரசியலமைப்பு சட்டமும் இந்து மதத்திற்கு ஆதரவாக இல்லை.