பத்ரிநாத்தில் ராமானுஜரின் 27 அடி உயர ’திருவுருவச்சிலை திறப்பு!
ADDED :3425 days ago
பத்ரிநாத்: ராமானுஜரின் ஆயிரமாவது திருஅவதார ஆண்டு அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருஅவதார ஆண்டு வைபவத்தை முன்னிட்டு ’பத்ரிநாத்’ திவ்யதேசத்தில் கடந்த 24ம் தேதியன்று, 27அடி உயர ’ஸ்ரீ ராமானுஜர்’ திருவுருவச்சிலை இளைய ஜீயர் ஸ்வாமிகளால் திறந்துவைக்கப்பட்டது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.