சதானந்த விநாயகர் கோவிலில் நவராத்திரி விழா
ADDED :3335 days ago
புதுச்சேரி: சதானந்த விநாயகர் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பு பூஜை நடந்தது. பிருந்தாவனம் சதானந்த விநாயகர் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு துர்கை சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து, ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் டாக்டர் புருஷோத்தமன், துணைத் தலைவர் செல்வகாந்தி, செயலாளர் உதயசங்கர், ராமமூர்த்தி, தேவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.