திருத்தணி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் பாலாபிஷேகம்
ADDED :3289 days ago
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, பாலாபிஷேகம் நடந்தது. திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமத்தில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, புரட்டாசி செவ்வாய்கிழமை மற்றும் நவராத்திரி விழாவையொட்டி, காலை 8:00 மணிக்கு, மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையும், மாலை, 3:00 மணி முதல், மாலை, 4:30 மணி வரை, ராகுகால பூஜையும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, மூலவருக்கு மீண்டும் சிறப்பு அபிஷேகம், வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இரவு, 7:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள் மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.