பஞ்சவடீ கோவிலில் ஆயிரம் பேருக்கு அன்னதானம்
ADDED :3329 days ago
புதுச்சேரி: புரட்டாசி மாதம் நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு, பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், தலை வாழை இலை போட்டு, ஆயிரம் பேருக்கு இன்று (8ம் தேதி) அன்னதானம் வழங்கப்படுகிறது. புதுச்சேரி – திண்டிவனம் மெயின் ரோடு பஞ்சவடீயில், 36 அடி உயர, ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. புரட்டாசி நான்காம் சனிக்கிழமையான இன்று (௮ம் தேதி) பகல் 11.30 மணி முதல் 2.00 மணி வரை, ஆயிரம் பேருக்கு தலைவாழை இலை போட்டு, உணவு வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சாரிட்டபிள் டிரஸ்டியினர் செய்து வருகின்றனர்.