செஞ்சி கோவிலில் நவராத்திரி விழா
ADDED :3426 days ago
செஞ்சி: செஞ்சி கிருஷ்ணாபுரம் சுந்தரவிநாயகர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.
கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு கொலு அமைத்து, வழிபாடு நடத்தி வருகின்றனர். தினமும் சுந்தரவிநாயகர், சிவலிங்கம், முருகப்பெருமான், விஷ்ணு துர்கைக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வருகின்றனர். மாலையில் பக்தி பாடல்களுடன் கொலு பூஜைகளை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் 7 ம் நாள் விழாவாக, விஷ்ணு துர்கைக்கு காமாட்சியம் மன்
அலங்காரம் செய்தனர்.