அமிர்த கணபதி கோவிலில் மகா சண்டி யாகம்
ADDED :3469 days ago
விழுப்புரம்: விழுப்புரம் கோவிந்தசாமி நகர் அமிர்த கணபதி கோவிலில் மகா சண்டி யாகம் நடந்தது. முதல்வர் ஜெ., பூரண குணமடைய வேண்டி அ.தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர கூட்டுறவு வங்கி தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். துணை தலைவர் குப்புசாமி, இயக்குனர்கள் தனுசு, கமருதீன், கலைச்செல் வன், ராதிகா, மல்லிகா, ஹேமாவதி ரமேஷ், சம்பத், கோவில் அறங்காவலர் தயாளன், நிர்வாகி கள் கோபாலகிருஷ்ணன், திருக்காமி, கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றனர்.