வடவெட்டி கோவிலில் அமாவாசை உற்சவம்
ADDED :3293 days ago
செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. செஞ்சி அருகே உள்ள வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு, ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதை முன்னிட்டு காலையில் வினாயகர், பெரியாழி, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனையும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு அன்னதானம் செய்தனர். இரவு 11:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.