பெரியகுளத்தில் நவ.,5 சூரசம்ஹாரம்
ADDED :3294 days ago
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் கந்த சஷ்டி 5ம் நாள் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நவ.,5 சூரசம்ஹாரம் நடக்கிறது. இக்கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.,31ல் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் விரதம் மேற்கொண்டுள்ளனர். தினமும் மூலவர் பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. உற்சவர் முருகன், வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். நவ.,4, 5ம் நாள் பூஜை நடந்தது. நவ.,5 சூரசம்ஹாரமும், நவ.,6 திருக்கல்யாணம் மாலையில் கல்யாண விருந்தும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.