புதுப்பாளையம் சுப்ரமணியர் கோவிலில் சூரசம்ஹாரம்
ADDED :3294 days ago
கடலுார்: கடலுார், புதுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்தது. கடலுார், புதுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அபிஷேகம், மாட வீதியுலா நடந்தது. கடந்த 4ம் தேதி வேல் வாங்குதல், காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், உற்சவர் மாடவீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மதியம் மகா அபிஷேகம், இரவு சுப்ரமணிய சுவாமி, சூரனை சூரசம்ஹாரம் செய்து வீதியுலா நடந்தது. நேற்று மகா அபிஷேகம், சுப்ரமணியர், வள்ளி தெய்வாணை திருக்கல்யாணம் நடந்தது. இன்று (7ம் தேதி) காலை 9:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.