ஸ்தலசயன பெருமாள் கோவிலில் பொய்கையாழ்வார் உற்சவம்
ADDED :3263 days ago
மாமல்லபுரம் : மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பொய்கையாழ்வார் உற்சவம் நடைபெற்றது. இக்கோவிலில், பூதத்தாழ்வார் அவதார உற்சவம், கடந்த மாதம் 30ம் தேதி துவங்கி, நேற்று வரை, தினமும் சிறப்பு திருமஞ்சனம், வீதியுலா என, நடைபெற்றது.இதற்கிடையே, நேற்று முன்தினம், பொய்கையாழ்வார் அவதரித்த திருவோண நட்சத்திர நாளை முன்னிட்டு, அன்று மாலை, ஸ்தலசயன பெருமாள், தேவியர், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோருக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று, இரவு, அவர்கள் வீதியுலா சென்றனர். கோவிலை அடைந்ததும், திருவாய்மொழி சேவை நடந்தது.