முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி சர்வ சமய பிரார்த்தனை
ADDED :3315 days ago
மதுரை, மதுரை மனிதநேய மன்றம் சார்பில் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி சர்வ சமய பிரார்த்தனை நடந்தது.பிஷப் அந்தோணி பாப்புசாமி தலைமை வகித்தார். மன்றத் தலைவர் ஜேம்ஸ் எழுதிய உடல் உள்ளம் ஆன்மா நுால் வெளியிடப்பட்டது. உலக திருக்குறள் பேரவை மணி மொழியன், முன்னாள் வானொலி நிலைய இயக்குனர் இளசை சுந்தரம், சங்க பொதுச் செயலாளர் அந்தோணிராஜ், முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் சுந்தர் மற்றும் பலர் பங்கேற்றனர்.