மயிலம் பகுதிகளில் சனிப் பிரதோஷம்
ADDED :3289 days ago
மயிலம்: மயிலம் பகுதி கோவில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு நடந்தது. மயிலம் ஒன்றியத்திலுள்ள கொல்லியங்குணம், பாதிராப்புலியூர், பெரும்பாக்கம், தென்பசியார், ஆலகிராமம் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் வழிபாடு நடந்தது. கொல்லியங்குணம் சிவன் கோவிலில் மாலை 5 மணிக்கு கோவில் மூலவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட நறுமணப்பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு நடந்த மகா தீபாராதனை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.