பாலாபிஷேகம் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
                              ADDED :3275 days ago 
                            
                          
                          திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, பாலாபிஷேகம் நடந்தது. திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் அமைந்துள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, செவ்வாய்க்கிழமையை யொட்டி, காலை 6:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 3:00 மணி முதல் 4:30 வரை, ராகுகால பூஜையில் திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், திருத்தணி, மத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.