தாம்பத்ய தட்சிணாமூர்த்திக்கு சுருட்டப்பள்ளியில் சிறப்பு பூஜை
ADDED :3276 days ago
ஊத்துக்கோட்டை: பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள தாம்பத்ய தட்சிணாமூர்த்திக்கு, சிறப்பு பூஜை நடந்தது. சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ள சர்வ மங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில். இக்கோவில் வளாகத்தில், தாம்பத்ய தட்சிணாமூர்த்தி சிலை உள்ளது. மற்ற கோவில்களில் தட்சணாமூர்த்தி, நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆனால், சுருட்டப்பள்ளியில் உள்ள தாம்பத்ய தட்சணாமூர்த்தி, மனைவி கவுரியை அணைத்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு, ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு பூஜை நடைபெறும். நேற்று வியாழக்கிழமையன்று, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள், கொண்டை கடலை மாலையை சுவாமிக்கு அணிவித்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.