திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு விழா
ADDED :5242 days ago
திருமலையில் நடந்து வந்த பிரம்மோற்ஸவ விழா 9ம் நாளான நேற்றுடன் நிறைவு பெற்றது. கோயிலை ஒட்டியுள்ள புஷ்கரணி எனும் புனித குளத்தில் சக்ர ஸ்நானம் நடந்தது. அது சமயம் குளத்தில் பக்தர்கள் நீராடினர். புஷ்கரணியில் நீராடுவதற்காக சுவாமியின் சக்ரம் கோயில் அர்ச்சகர்களால் கொண்டுவரப்பட்டது.