வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் அமாவாசை உற்சவம்
ADDED :3333 days ago
செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மேல்மலையனுார் தாலுகா, வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாகாளய அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் விநாயகர், பெரியாழி, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. தொடர்ந்து இரவு 10:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.