உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செடி, கொடிகளின் கண்காட்சியா கோபுரம்?

செடி, கொடிகளின் கண்காட்சியா கோபுரம்?

அகரம்: பழமை வாய்ந்த அகரம் வைகுண்ட பெருமாள் கோவில் கோபுரத்தில் அதிகளவில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால், கோ புரத்தில் விரிசல் ஏற்பட்டு விழுந்து விடுமோ என, பக்தர்கள் பரிதவிக்கின்­றனர். அதை சீரமைக்க அறநிலைய துறை அதிகாரிகள் முன்வரவேண்டும் எனவும், கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியம், மானாம்­பதி ஊராட்சி, அகரம் கிராமத்தில் பழமை வாய்ந்த வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. அறநிலை யத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், 10 ஆண்டுகளுக்கு முன், 25 லட்சம் ரூபாய் செலவில் திருப்­பணிகள் நடைபெற்று, நாள்தோறும் நித்ய பூஜைகள் நடத்தப்­படுகின்றன. ஆனால், பராமரிப்பின்றி இந்த கோவிலை நிர்வகிப்­பதால், கோபுரத்தில் செடி, கொடிகள் முளைத்துள்ளன.

கோவில் கோபுரத்தின் மீதும், மண்டபத்தின் மீதும் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. இதே நிலை நீடித்தால், கோபுரத்தில் விரிசல் விழும் நிலை ஏற்­படும். இப்­பழமை வாய்ந்த வைகுண்ட பெருமாள் கோவிலை அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை செய்து, கோவிலை பாதுகாக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !