இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு
ADDED :3255 days ago
சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ .21.45 லட்சம் கிடைத்தது . இக்கோயில் செயல் அலுவலர் வில்வமூர்த்தி, பரமக்குடி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமசாமி, பரம்பரை அறங்காவலர் குழுவை சேர்ந்த பூஜாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டது. மகளிர் சுயஉதவிக்குழுவினர், கோயில் பணியாளர்கள் கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். ரூ.21 லட்சத்து 45 ஆயிரத்து 827 ரொக்கம்,120 கிராம் தங்கம், 540 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணியை தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.