உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயில் ஆருத்ரா தரிசன திருவிழா ஜன. 2ல் தொடக்கம்

திருப்பரங்குன்றம் கோயில் ஆருத்ரா தரிசன திருவிழா ஜன. 2ல் தொடக்கம்

திருப்பரங்குன்றம்:  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழா ஜன. 2ல் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டும்  நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. கோயிலில் அன்றுமுதல் ஜன. 9வரை மாணிக்கவாசகர் திருவாட்சி மண்டபத்தை வலம் சென்று எழுந்தருள்வார். ÷ காயில் ஓதுவார்களால் திருவெம்பாவை 21 பாடல்கள் பாடப்படும்.  ஜன. 10 காலையில் மாணிக்கவாசகர் சப்பரத்தில் கிரிவலம், இரவு கோயிலு க்குள் கண்ணுõஞ்சல் முடிந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை சிறிய ராட்டினத்தில் கோயில் முன்பு எழுந்தருளி  ராட்டின திருவிழா நடக்கும்.  ஜன. 10 அதிகாலை கோயில் மகா மண்டபத்தில் மூலவர் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு தைல காப்பு சாத்துபடியாகி,  உற்சவர்களுக்கு அபிஷேகங்கள் முடிந்து தனித்தனி பூ சப்பரத்தில் கிரிவலம் சென்று அருள்பாலிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !