2017 இந்தியாவில் என்ன நடக்கும்?
வியாசர் இயற்றிய சூரிய ஸ்லோகத்தை தினமும் காலையில் சொல்லி வழிபட்டால் ஆண்டு முழுவதும் நலமுடன் வாழும் பாக்கியம் உண்டாகும். ஜபாகு ஸும ஸங்காஸம்
காஸ்ய பேயம் மகாத்யுதிம் தமோரிம் ஸர்வ பாபக்னம் பிரண தோஸ்மி திவாகரம்”
இதை சொல்ல முடியாதவர்கள், "காசிப முனிவரின் வழியில் வந்தவரே! செம்பருத்தி மலர் போல சிவந்தநிறம் படைத்தவரே! பேரொளி கொண்டவரே! பாவச் சுமைகளைச் சுட்டெரிப்பவரே! இருளின் பகைவரே! சூரிய தேவரே! உம்மைப் போற்றுகிறோம்” என்று சொல்லி வழிபாடு செய்யலாம். இதை 12 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு.
2017இந்தியாவில் என்ன நடக்கும்?
மக்கள் மத்தியில் ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். கோவில்களில் அதிக வசதி செய்யப்படும். ரூபாயின் மதிப்பு உயரும். மக்கள் வரிப்பணத்தை சரிவரச் செலுத்தி வளர்ச்சிக்குத் துணை நிற்பர். அரசு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறும்.
*கல்வித்தரம் உலக நாடுகளுக்கு இணையாக வளரும். பண்பாடு, கலாசாரத்தின் முக்கியத்துவம் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும்.
*ராணுவத்தை பலப்படுத்தும் விதத்தில் நவீன ஏவுகணை, போர் விமானங்கள் வாங்கப்படும். தீவிரவாதம் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும்.
*மழை வளத்தால் உணவு உற்பத்தி பெருகும். உரம், பூச்சிகொல்லி மருந்து விலை குறையும். விளைச்சல் அதிகரிப்பால் விலைவாசி குறையும்.
*அந்நிய நாடுகளின் முதலீடு அதிகரிக்கும். பயனுள்ள திட்டங்கள் அறிவிக்கப்படும். தொழில் வளர்ச்சி பெருகும்.
*தங்கம், வைரம், வெள்ளி, மனை, வீடு ஆகியவற்றின் விலை குறையும். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை சற்று அதிகரிக்கும்.
*கடல் சீற்றத்தால் கடலோரப்பகுதிகளில் உயிர், பொருள் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு.
*மத்திய அரசுடன் சுமூக உறவு இருக்கும். பொருளாதார வளர்ச்சியால் மக்கள் நலன் பாதுகாக்கப்படும்.
*முக்கிய தலைவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
*விவசாயம், தொழில் வளர்ச்சிக்கான கடன் தாராளமாக வழங்கப்படும்.
*மாணவிகள் கல்வி, விளையாட்டில் திறமையை வெளிப்படுத்துவர்.
*சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். புதிய நோய்கள் கட்டுப்படுத்தப்படும்.
*அதிகாரிகள் திறமையுடன் செயல்பட்டு மக்கள் மத்தியில் புகழ் பெறுவர்.
*பெண்களின் நிலை மேம்படும். சமூக சேவையில் அவர்கள் முன்னிலை வகிப்பர்.
*படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். முதியோர் நலன் குறித்த புதிய திட்டங்கள் அறிமுகமாகும்.
*இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபடும்.
புத்தாண்டில் தமிழகத்தின் நிலை!
*மத்திய அரசுடன் சுமூக உறவு இருக்கும். பொருளாதார வளர்ச்சியால் மக்கள் நலன் பாதுகாக்கப்படும்.
*முக்கிய தலைவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
*விவசாயம், தொழில் வளர்ச்சிக்கான கடன் தாராளமாக வழங்கப்படும்.
*மாணவிகள் கல்வி, விளையாட்டில் திறமையை வெளிப்படுத்துவர்.
*சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். புதிய நோய்கள் கட்டுப்படுத்தப்படும்.
*அதிகாரிகள் திறமையுடன் செயல்பட்டு மக்கள் மத்தியில் புகழ் பெறுவர்.
*பெண்களின் நிலை மேம்படும். சமூக சேவையில் அவர்கள் முன்னிலை வகிப்பர்.
*படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். முதியோர் நலன் குறித்த புதிய திட்டங்கள் அறிமுகமாகும்.
*இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபடும்.