உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி சபரிமலையில் பக்தர்கள் விளக்கு பூஜை!

தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி சபரிமலையில் பக்தர்கள் விளக்கு பூஜை!

சபரிமலை: தமிழகத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலக அமைதிக்காகவும் சிவகங்கை மானாமதுரை பஞ்சமுக ஆஞ்சநேய ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலை சன்னிதானத்தில் விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாஸ்கரன் குருசாமி தலைமையில் பஞ்சமுக ஆஞ்சநேய ஐயப்ப சேவா சங்கத்தை சேர்ந்த 250 பக்தர்கள் இருமுடி கட்டு ஏந்தி சபரிமலை வந்து சுவாமி தரிசனம் முடித்த பின்னர் மாளிகைப்புறம் கோயில் அருகில் உள்ள மண்டபத்தில் விளக்கு பூஜை நடத்தினர். 150க்கும் மேற்பட்ட விளக்குகளை ஓம் வடிவத்தில் வைத்து தீபம் ஏற்றி அதை சுற்றி பக்தர்கள் அமர்ந்து பஜனை பாடினர். இதன் நடுவில் கன்னி ஐயப்ப பக்தர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர். சபரிமலைக்கு முதன் முறையாக வரும் கன்னி ஐயப்ப பக்தர்களுக்காகவும், தமிழகத்தில் மழை பொழிய வேண்டியும், உலக அமைதிக்காகவும், மக்களின் சுபிட்சத்துக்காகவும் 27 ஆண்டுகளாக இந்த பூஜை நடத்தப்படுவதாக பாஸ்கரன் குருசாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !