உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் பாலாபிஷேகம்

மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் பாலாபிஷேகம்

திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.

திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான, மத்துார் கிராமத்தில் உள்ளது, மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில். இங்கு, நேற்று செவ்வாய்கிழமையை ஒட்டி, காலை, 8:00 மணிக்கு மூலவருக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை, 3:00 மணி முதல் மாலை, 4:30 வரை ராகு கால பூஜையும் நடந்தது. காலை முதல் மாலை வரை திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், திருத்தணி, மத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !