ராவுத்தம்பட்டி கும்பாபிஷேக விழா
ADDED :3309 days ago
நத்தம்: நத்தம் அருகே முளையூர் ராவுத்தம்பட்டியில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று முன்தினம் மாலை முதல்கால யாக பூஜையுடன் விழா துவங்கியது. பின், விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், சாந்தி ஹோமம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை இரண்டாம் கால யாக வேள்வி துவங்கி கனிமூலிகை பூஜை, கோ பூஜை, தன பூஜை, மூன்றாம்கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து தீர்த்த குடங்கள் அழைத்து வரப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது. ஆண்டியம்பலம் எம்.எல்.ஏ., உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.