உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுருட்டப்பள்ளியில் சிவராத்திரி உற்சவம்

சுருட்டப்பள்ளியில் சிவராத்திரி உற்சவம்

ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், வரும், 16ம் தேதி, 11 நாள் சிவராத்திரி உற்சவம் நடைபெற உள்ளது. சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில், சிவராத்திரி உற்சவம் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம், 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தமிழகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து, திரளான பக்தர்கள், இங்கு குடும்பத்துடன் தங்கி, விழாவில் கலந்து கொள்வர். இந்தாண்டு சிவராத்திரி உற்சவம், வரும், 16ம் தேதி வியாழக்கிழமை துவங்குகிறது. உற்சவக் காலத்தில், 18ம் தேதி முதல், தினமும் மாலை, 4:00 மணிக்கு சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள், மாலை, 5:00 மணிக்கு யாகசாலைப் பூஜைகள், இரவு, 7:00 மணிக்கு அரிகதை, அன்னமாச்சார்யா கீர்த்தனைகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும், உற்சவர் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !