உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் அம்மனுக்கு சீர் வழங்கும் விழா

சமயபுரம் அம்மனுக்கு சீர் வழங்கும் விழா

ஏத்தாப்பூர் : ஏத்தாப்பூர் சமயபுரம் மாரியம்மனுக்கு, சீர் வழங்கும் விழா நடந்தது. சேலம், ஏத்தாப்பூர், லட்சுமி கோபால சுவாமி கோவிலில் இருந்து, வசிஷ்ட நதிக்கரையில் உள்ள சமயபுரம் மாரியம்மனுக்கு, ஆறாம் ஆண்டாக, நேற்று, மேளதாளம் முழங்க, சீர் வரிசை பொருட்களை, ஏராளமான பக்தர்கள் கொண்டு சென்றனர். மாலை, 6:00 மணியளவில், மூலவர் மாரியம்மனுக்கு, சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. இதில், ஏத்தாப்பூர் சுற்றுவட்டார கிராம மக்கள், ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !