உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனூர் கோவிலில் திருவிளக்கு பூஜை

தீவனூர் கோவிலில் திருவிளக்கு பூஜை

திண்டிவனம் : தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை ௪:௦௦ மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு ௭:௦௦ மணிக்கு, சித்தி புத்தி சமேத பொய்யாமொழி விநாயகருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருவிளக்கு பூஜையில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலரின் அதிகாரம் பெற்ற முகவர் மணிகண்டன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !