உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவிலில் மூலமந்திர ஹோமம்

ஆஞ்சநேயர் கோவிலில் மூலமந்திர ஹோமம்

திருவள்ளூர் : திருவள்ளூர் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், மூல மந்திர ஹோமம் நாளை நடைபெறுகிறது. திருவள்ளூர், பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயரத்தில், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், மூல நட்சத்திரத்தன்று, கோவில் வளாகத்தில் மூல மந்திர ஹோமம் நடைபெறுகிறது.நாளை (பிப்., 21), மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மூல மந்திர ஹோமம், காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது. ஹோம நிறைவில், காலை, 11:30 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !