மருதாணி பூசுவது ஏன்?
ADDED :3259 days ago
ராவணனால் கடத்தப்பட்ட சீதை அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டாள். சோகமாக இருந்த அவளது மனநிலையை அங்கிருந்த மருதாணி மரங்களின் இளந்தென்றல் குறைத்தது. உடனே அந்த மரங்களிடம், திருமண நாளில் உன் இலையைப் பெண்கள் கையில் பூசினால், அவர்களுக்கு எந்தக் கஷ்டமும் வராது, என்ற பெருமையை வழங்கினாள். அவள் வரம் கொடுத்த நாளே அசோகாஷ்டமி. பங்குனி 22 (ஏப்.4) இந்த நாள் வருகிறது.