சித்தர்கள் வணங்கிய தொட்டிச்சி அம்மன்!
பழநி: அனேக அதிசயங்களை கொண்டது பழநிமலை. இதன் அடிவாரத்தில் விநாயகர், காளியம்மன், மகிஷாசுரமர்த்தினி உட்பட பலருக்கும் கோயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தனிச்சிறப்பு வாய்ந்தது. அதில் வடக்குகிரிவீதியில் உள்ளது, பலநுாறு ஆண்டுகளுக்குமுன் சித்தர்கள் போகர், புலிப்பாணி வணங்கிய தொட்டிச்சியம்மன் கோயில். தொட்டிச்சி அம்மனை வணங்கினால் ஏவல், பில்லி சூனியம் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் செவ்வாய், வெள்ளி மற்றும் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் அங்கு வருகின்றனர்.
புலிப்பாணி ஆசிரமம் சிவானந்த பாத்திர சுவாமிகள் கூறியதாவது: இவ்வுலகின் காவல்தெய்வமாக தொட்டிச்சியம்மன் வணங்கப்படுகிறார். பழநி நவபாஷாண சிலையை வடிவமைத்த போகர் மற்றும் அவரது சீடர் புலிப்பாணி சித்தர்களால் இக்கோயில் உருவாக்கப்பட்டது. இது நாயக்கர்களின் குலதெய்வம். தொட்டிச்சியம்மன், மலைக்கோயில் மூலவர் ஞான தண்டாயுதபாணி சுவாமி முகங்கள் ஒரேமாதிரி இருப்பது சிறப்பு. நவராத்திரிவிழா, பவுர்ணமி, செவ்வாய், வெள்ளியில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்கள் பால், பன்னீர், சிவப்பு மலர்களால் அபிஷேகம் அர்ச்சனை செய்து அம்மன் அருள்பெறுகின்றனர், என்றார். -மேலும் விபரங்களுக்கு: 78110-01166ல் பெறலாம்.