உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை சிவன் கோயில்களில் பிரதோஷ விழா

உத்தரகோசமங்கை சிவன் கோயில்களில் பிரதோஷ விழா

கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. சங்கடங்களை தீர்க்கும் சனி பிரதோஷம் அரிதாக வருகிறது. மாலை 4:30 முதல் 6:00 மணி வரை 18 வகையான மூலிகை அபிஷேகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். சாயல்குடி: மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிற வள்ளியம்மன் கோயிலில் சனி பிரதோஷம் கோலாகலமாக நடந்தது. மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலையில் அன்னதானம் நடந்தது, ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.

சிக்கல்: மேலக்கிடாரத்தில் உள்ள பழமையான திருவனந்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷம் நடந்தது. ஏற்பாடுகளை மாதாந்திர விழாக்குழுவினர் செய்திருந்தனர். டி.எம்.கோட்டையில் உள்ள செஞ்சடைநாதர் சமேத கருணாகடாச்சி அம்மன் கோயில், சாயல்குடி கைலாசநாதர் சமேத மீனாட்சியம்மன் கோயில் ஆகிய இடங்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !