சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு
ADDED :3116 days ago
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, மூலவர் பெருமாள் சீதா லட்சுமணன், அனுமன் சமேத கோதண்டராமன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு நேற்று அருள்பாலித்தார். நேற்று காலை 6:30 மணிக்கு, விஸ்வரூப தரிசனம், காலை 9:00 மணிக்கு, உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, சிறப்பு அலங்காரத்தில் திருக்கண்ணாடி அறையில் அருள்பாலித்தார். மதியம் 12:30 மணிக்கு, உச்சிக் கால பூஜை, மாலை 4:00 மணிக்கு, நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு, நித்யபடி பூஜையும், இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.