வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
ADDED :3114 days ago
செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் தாலுகா வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் வினாயகர், பெரியாழி, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 6 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. 7 மணிக்கு அன்னதானம் நடந்தது. இரவு 10.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். இரவு சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.