உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யானை வாகனத்தில் திருத்தணி கோதண்டராமர் வீதியுலா

யானை வாகனத்தில் திருத்தணி கோதண்டராமர் வீதியுலா

திருத்தணி: கோதண்டராம சுவாமி கோவிலில் நடந்து வரும் பிரம் மோற்சவ விழாவில், உற்சவர் யானை வாகனத்தில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவாலங்காடு ஒன்றியம், நெடும்பரம் கிராமத்தில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில், கடந்த மாதம், 26ம் தேதி முதல், பங்குனி மாத பிரம் மோற்சவம் நடந்தது வருகிறது. தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்து வருகிறது. இரவு ஒவ்வொரு வாகனத்தில் உற்சவர் கோதண்ட ராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு, உற்சவர் யானை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, குதிரை வாகனத்திலும், நாளை, ஊஞ்சல் சேவையும், 5ம் தேதி, காலை 10:30 ம ணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், மாலையில் ஸ்ரீராமநவமி வீதியுலா நடை பெறுகிறது. வரும், 6ம் தேதி காலையில், உற்சவர் திருமஞ்சனம் மற்றும் புஷ்ப யாகத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !