உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு சிறப்பு பூஜை

திருத்தணி மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு சிறப்பு பூஜை

திருத்தணி மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.திருத்தணி, முருகன் கோவிலின் உபகோவிலான மத்தூர் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று காலை, 8:00 மணிக்கு மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வண்ண மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மதியம், 12:00 மணிக்கு, உச்சிகால பூஜையும், மாலை, 3:00 மணி முதல், 4:30 வரை, ராகுகால பூஜை நடந்தது. காலை முதல், மாலை வரை திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.மாலை, 6:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு வண்ணமலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், திருத்தணி தாலுகாவில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !