ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED :3097 days ago
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும், ஆதிகேசவப் பெருமாளுக்கு, 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா, நேற்று துவங்கி ஏப்., 21ல் முடிவடைகிறது. இதை தொடர்ந்து, ஏப்., 22 முதல், மே 1 வரை, ஸ்ரீராமானுஜரின், 1,000மாவது ஆண்டு விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.