போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
போடி: தென்திருவண்ணாமலை என போற்றப்படும் போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா இன்று முதல் 8 நாட்கள் நடக்கிறது.தென் திருவண்ணாமலை என போற்றப்படும் போடி பரமசிவன் கோயில் சித்திரை திரு விழாவையொட்டி, இன்று காலை 10.30 மணிக்கு பெரியாண்டவர் கோயிலிலிருந்து சிவன் உருவபடம் மற்றும் திருஉண்டியல் நகரின் முக்கிய ரோடு வழியாக பரமசிவன் மலைக்கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, திருவிழா துவங்கிறது. விழாவினை முன்னிட்டு சிவன் மற்றும் லட்சுமிநாராயணன், முருகன் வள்ளி,தெய்வானைக்கு தினந்தோறும் சிறப்பு பூஜை, அபிஷேகம் அலங்காரம் நடைபெறும். தக்கார் பாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் முன்னிலை வகிக்கிறார். அறக்கட்டளை நிர்வாகிகள், வர்த்தகர்கள் சங்கம்,பூ வியாபாரிகள் சங்கம், ஏலக்காய் வியாபாரிகள் சங்கத்தினர் உட்பட பலர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சிவனுக்கு தினமும் சிறப்பு பூஜை, நடக்கிறது. திருவிழா இன்று துவங்கி 22ம்தேதி வரை நடக்கிறது.