உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரமங்கலம் சித்திரை திருவிழா கோலாகலம்

சூரமங்கலம் சித்திரை திருவிழா கோலாகலம்

சூரமங்கலம்: சித்திரை திருவிழா முன்னிட்டு, இரும்பாலை, சர்க்கார்கொல்லப்பட்டி, பாறை வட்டம் காளியம்மன் கோவிலில், நேற்று காலை, 11:00 மணியளவில் பத்ரகாளியம்மன் பவனிவர, பக்தர்கள், சக்தி, பூங்கரகம் எடுத்துவந்தனர். அப்போது, சிலர் அலகுகுத்தியும், இருவர் காளி வேடம் அணிந்தும், ஆடியபடி ஊர்வலம் வந்தனர். பின், கோவில் அருகே, பக்தர்கள் பொங்கல் வைத்து, சுவாமியை வழிபட்டனர். மதியம், 1:00 மணிக்கு, அம்மன்
புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். 4:00 மணிக்கு, சிங்க வாகனத்தில் அம்மன் திருவீதியுலா, இரவு, 7:00 மணிக்கு, தாலாட்டு ஊஞ்சல் உற்சவ சேவை நடந்தது. முகூர்த்தக்கால் நடல்: சித்திரை பிரம்மோற்சவ விழா தொடக்கமாக, செவ்வாய்ப்பேட்டை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 9:00 மணியளவில், 13 அடி உயர மூங்கில் கொம்புக்கு, மஞ்சள், குங்குமம் சகிதமாக, மாவிலை தோரணம் கட்டி, பூஜை செய்து, முகூர்த்தக்கால் நடப்பட்டது. பின், மூலவர் சுந்தரேஸ்வரர், மீனாட்சி தாயார், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !