கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :3119 days ago
கொடைக்கானல்: கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலில் கும்பாபிஷேக நினைவு வருஷாபிஷேக விழா நடந்தது. பழநி தண்டாயுதபாணி கோயிலின் உபகோயில் குறிஞ்சியாண்டவர் கோயில். இங்கு நேற்று குறிஞ்சியாண்டவருக்கு வருஷாபிஷேக விழா நடந்தது. குறிஞ்சியாண்டவர் இராஜ அலங்காரத்தால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்கள் அரோகரா கோஷத்துடன் வழிபட்டனர். ஏற்பாடுகளை இணை இயக்குனர் இராஜமாணிக்கம் செய்திருந்தார்.