உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.18.10 லட்சம், 16 கிராம் தங்கம் காணிக்கை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.18.10 லட்சம், 16 கிராம் தங்கம் காணிக்கை

நாமக்கல்: ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில், 18.10 லட்சம் ரூபாய், 16 கிராம் தங்கம், 103 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர்.

நாமக்கல் நகரின் மையத்தில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டு
செல்கின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற, காணிக்கை செலுத்துவது வழக்கம். அவை, குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்பட்டு, கோவில் கணக்கில் வரவு வைக்கப்படும். அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணன் தலைமையில், உதவி ஆணையர்கள் ரமேஷ், ரத்தினவேல்பாண்டியன் ஆகியோர்
முன்னிலையில், நேற்று உண்டியல் திறக்கப்பட்டது.

தன்னார்வலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 18 லட்சத்து, 10 ஆயிரத்து, 488 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும், 16 கிராம் தங்கம், 103 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !