வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பிரதோஷ பூஜை
ADDED :3116 days ago
வால்பாறை : வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பிரதோஷபூஜை நடந்தது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதர் சன்னதியில், நேற்றுமுன்தினம் மாலை, 5:00 மணிக்கு சந்தனம், திருநீர், இளநீர், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சுவாமி தேவியருடன் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். பூஜையில் நுற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.