கல்யாண விநாயகர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்
ADDED :3240 days ago
திருநகர்: திருநகர் பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் மழை வேண்டியும், சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜைகள், யாகம் நடந்தது. கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள புவனேஸ்வரி அம்மன் முன்பு யாகம் வளர்த்து பூஜைகள் முடிந்து மூலவர், உற்சவருக்கு 108 இளநீர் அபிஷேகம் நடந்தது. பின்பு மழை வேண்டி சிறப்பு அர்ச்சனை நடந்தது. கோயில் நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.