ஞானானந்தா தபோவனத்தில் சித்ரா பவுர்ணமி விழா
ADDED :3117 days ago
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ ஞானானந்தா தபோவனத்தில் நடந்த சித்ரா பவுர்ணமி விழாவில், அதிஷ்டானம் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருக்கோவிலுார்‚ ஞானானந்தா தபோவனத்தில்‚ நேற்று சித்ராபவுர்ணமி விழா நடந்தது. காலை 6:00 மணிக்கு‚ அதிஷ்டானத்தில் மகன்யாச ஏகாதச ருத்ரஜபம்‚ மூர்த்திகள் அபிஷகம்‚ 6:00 மணிக்கு‚ கணபதி ேஹாமம்‚ பாத பூஜை‚ அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு‚ மணி மண்டபத்தில்‚ சிறப்பு அபிஷகம்‚ அலங்காரம்‚ அதிஷ்டானம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை தபோவன நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.