உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமி வேள்வி பூஜை

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமி வேள்வி பூஜை

மேல்மருவத்துார் : மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி, 1,008 யாக குண்டங்கள் அமைத்து, கலச விளக்கு வேள்வி பூஜையை, பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் சித்திரைப் பவுர்ணமி விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, சித்திரை பவுர்ணமி விழா, நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கள இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு, சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது. மாலை, 4:15 மணிக்கு, 1,008 சிறப்பு யாக குண்டங்கள் அமைத்து, கலச விளக்கு வேள்வி பூஜையை, பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாலை, 5:15 மணிக்கு, வேள்வி பூஜை நிறைவைடைந்தது. பூஜையில், விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, உயர் நீதிமன்ற நீதிபதி பாஸ்கர், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஸ்வரன், முருகேசன், ரயில்வே போக்குவரத்து அதிகாரி ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !